Categories: இந்தியா

குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்! கதிகலங்க வைத்த அதிர்ச்சி வீடியோ!

Published by
பால முருகன்

மகாராஷ்டிரா : டோம்பிவிலியில் பெண் ஒருவர் கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண் வேதனை அடைந்து இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தானே நகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட டோம்பிவிலி மன்படா காவல் நிலையப் பகுதியை சேர்ந்த ப்ரீத்தி உமாபாரதி என்ற பெண்ணுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன அந்த பெண் பால்கனியின் விளிம்பில் நின்று கொண்டு கீழே விழுவதற்கு முயற்சி செய்தார்.

அப்போது அங்கிருந்தவர்கள் வேண்டாம் அவசர பட்டு இந்த முடிவை எடுக்காதீர்கள் என்பது போல கூறியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்வதை எல்லாம் கொஞ்சம் கூட கேட்காத ப்ரீத்தி உமாபாரதி  மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இந்த சம்பவத்தை அருகில் உள்ள பிளாட்டில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

கீழே விழுந்த பெண்ணிற்கு தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவலை கொடுக்க இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கிடைத்த தகவலின்படி, அந்த பெண் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பெண் தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சியான அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

(குறிப்பு ) வீடியோ உங்கள் மனநிலையை கலைக்கும் வகையில் இருப்பதால் உங்கள் மனநிலைக்கு ஏற்றபடி பார்த்துக்கொள்ளுங்கள். 

Published by
பால முருகன்

Recent Posts

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

2 hours ago

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

2 hours ago

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

4 hours ago

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

4 hours ago

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

4 hours ago