Categories: இந்தியா

ஆவிகளுடன் பேசிய மனைவி? சந்தேகப்பட்டு கொடூரமாக கொலை செய்த கணவன்!!

Published by
பால முருகன்

ராஜஸ்தான் : மாநிலத்தில் நபர் ஒருவர் தன்னுடைய மனைவி தொலைபேசியின் மூலம் ஆவிகளுடன் பேசுவதாக சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டத்தில் லால் என்பவர் தனது மனைவி தேவி மற்றும்  குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தேவி, லால் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளும் செவ்வாய்க்கிழமை அன்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது, புதன்கிழமை 2:30 மணியளவில் மனைவி தேவி  ஆவிகளுடன் தொலைபேசியின் மூலம் பேசுவதாக லாலுக்கு சந்தேகம் வந்துள்ளது. பின் தூங்கி கொண்டு இருந்த மனைவி தேவி யை கோடரியை வைத்து தாக்கி கொடூரமாக கொலை செய்தார். தாயின் அலறல் சத்தம் கேட்டு, தம்பதியரின் 17 வயது மகள் சுமித்ரா தந்தை லாலை தடுக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் , லால் கொடூரமாக தாக்கி கொண்டு இருந்தார். இதனால் மகள் சுமித்ராவுக்கும் காயம் ஏற்பட்டது .

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, ​​தாய்-மகள் இருவரும் பலத்த காயம் அடைந்து கீழே கிடைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து, காவல்துறையினருக்கு இந்த சம்பவம் குறித்த தகவலை தெரிவித்துவிட்டு  பாதிக்கப்பட்ட  தேவி மற்றும் சுமித்ராவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தகவலை தெரிவித்தார்கள்.  சுமித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தொலைபேசியின் மூலம் ஆவிகளுடன் பேசுவதாக சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுமித்ரா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில் லாலை கைது செய்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

41 minutes ago

Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…

1 hour ago

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…

1 hour ago

ஐபிஎல் தொடரில் கிங் கோலியின் புதிய சாதனை.! வேற யாருமே இல்ல..! அப்படி என்ன செய்தார்?

பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…

2 hours ago

தோனி தலைமையில் இன்று களம் காணும் CSK.! வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…

3 hours ago

தமிழ்நாடு வந்தார் அமித் ஷா.., புதிய பாஜக தலைவர் குறித்து ஆலோசனை.!

சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…

4 hours ago