குஜராத்தில் உள்ள வதோதரா நகரில் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தனது கணவர் முன்பு பெண்ணாக இருந்தவர் என்பதை மனைவி கண்டுபிடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஷீத்தல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் அவரைத் திருமணம் செய்துகொண்டபோது, தன் கணவன் முன்பு ஒரு பெண்ணாக இருந்ததார் என்பதை என்னால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறினார்.
வதோதராவைச் சேர்ந்த 40 வயதுப் பெண், 2014ஆம் ஆண்டு தன்னைத் திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் ஆணாக மாறுவதற்காக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் என்றும் ஷீத்தல், கோத்ரி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக விஜயதா என்ற ஒரு பெண்ணாக இருந்த டாக்டர் விராஜ் வர்தனுக்கு எதிராக மோசடி மற்றும் இயற்கைக்கு எதிரான உடலுறவு குறித்த புகாரை அவர் போலீசில் ஷீத்தல் அளித்துள்ளார்.
விராஜ் வர்தனை தான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமண தளம் மூலம் சந்தித்ததாகவும், பிப்ரவரி 2014 இல் தாங்கள் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்துகொண்டோம் என்றும் ஷீத்தல் போலீசாரிடம் கூறினார்.
ஜனவரி 2020 இல், அவர் உடல் பருமனை குறைக்க பேரியாட்ரிக்ஸ் அறுவை சிகிச்சை செய்ய கொல்கத்தாவுக்கு செல்ல இருப்பதாக ஷீத்தலிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் உண்மையில் ஆண் உறுப்புகளை பொருத்துவதற்கான அறுவை சிகிச்சைக்காகச் சென்றதாக பின்னர் தெரியவந்ததாக கூறினார்.
அவர் தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளத் தொடங்கியதாகவும், அதைப் பற்றி யாரிடமாவது கூறினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தன்னை மிரட்டியதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார்” என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு டெல்லியில் இருந்து வதோதராவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்” என்று கோத்ரி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம் கே குர்ஜார் கூறினார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…