சத்தீஸ்கரில் சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்து! 8 பேர் பலி, 23 பேர் காயம்.!

Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23

Chhattisgarh

Chhattisgarh:சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் சிக்கியவர்கள் பத்தரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கதியா கிராமத்திற்கு அருகே நடைபெற்ற குடும்ப விழா ஒன்றில் கலந்து கொண்டு தங்கள் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்ததாக அம்மாவட்ட காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்தில், காயமடைந்தவர்கள் அருகில் இருந்த இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர், படுகாயமடைந்த 4 பேர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு மாற்றப்பட்டள்ளார்கள்.