Categories: இந்தியா

இளம் பெண் தலையில் விழுந்த மரக்கிளை…! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

Published by
பால முருகன்

அமராவதி: ஆந்திர மாநிலம் திருமலை கோவிலுக்கு சென்ற பெண் மீது மரக்கிளை விழுந்ததில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமலையில் தரிசனம் செய்வதற்காக இளம் பெண் சென்று கொண்டிருந்த போது மெதுவாக நடந்து கோவிலுக்குள் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த பெரிய மரக்கிளை ஒன்று வேகமாக கீழே அவர் மீது விழுந்தது. இதில் அந்த பெண்ணிற்கு தலை மற்றும் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை வழிபாட்டு தளத்தில் இருந்த பக்தர் ஒருவர் தன்னுடைய போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது. வீடியோவில் ” அந்த பெண் வேகமாக சென்று கொண்டு இருக்கும்போது மரத்தின் கிளை கீழே விழுவது தெரிகிறது.

பிறகு மரக்கிளை விழுந்த தாக்கத்தில் அந்த பெண் கீழ் நோக்கி விழுகிறார். இதனை அவர் பக்கத்தில் நின்று பார்த்த ஒருவர் தள்ளி சென்று தப்பித்தார்.  திருமலை மலையில் உள்ள ஜபாலி க்ஷேத்திரத்தில் ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்ய சென்ற இளம் பெண் மீது மரத்தின் கிளை விழுந்தத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

15 minutes ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

44 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

1 hour ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago