Dead [file image]
மகாராஷ்டிரா : மாநிலத்தின் துலே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் ரீல்ஸ் செய்யும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தின் ஒரு நிமிட நீளமான வீடியோவில், பைக்கில் இருவரும் ஹெல்மெட் இல்லாமல் – நெடுஞ்சாலையில் தங்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டு இருக்கிறார்கள். அப்போது பின்புறம் அமர்ந்து இருந்தவர் ரீல்ஸ் செய்ய நினைத்து போனை எடுத்து பைக்கில் செல்வதை படம் பிடிக்க தொடங்கினார்.
பதிவுசெய்துகொண்டிருக்கும்போது, பைக்கை ஒட்டி சென்று கொண்டிருந்த மற்றோருவர் கேமராவை பார்த்து சிரித்தார். கேமராவை பார்த்த அவர் சாலையை பார்க்க முடியமால் இடது புறம் இருந்த தடுப்பில் மோதியதாக தெரிகிறது. மோதலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் இருவரும் காற்றில் பறந்து சாலையில் விழுந்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது .
வீடியோவின் முடிவில், விபத்திற்குப் பிறகு கேமரா மேலே வானத்தை கேமரா இருப்பதும், காயமடைந்த நபர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் உதவி கேட்பதைக் கேட்கலாம். “எனக்கு உதவுங்கள், எனக்கு இரத்தம் வருகிறது, என்று காயமடைந்தவர் மராத்தி மொழியில் கூறினார். பிறகு அவருக்கு ஒருவர் உதவியும் செய்துள்ளார். தகவலின் படி, இருவரும் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…