Categories: இந்தியா

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake வீடியோக்களை பார்த்துள்ளனராம்..!

Published by
மணிகண்டன்

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் மூலம் நல்லது எவ்வளவோ அதே போல தீமைகளும் நடக்க வாய்ப்புள்ளது என தொழில்நுட்ப வல்லுனர்களே எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

AI தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவர் முகத்தை வேறு ஒருவர் போல மாற்றியமைக்கப்படும் டீப்ஃபேக் (DeepFake) வீடியோக்கள் தற்போது அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறன. இதில் எது உண்மை, எது பொய் வீடியோ என சாமானியர்களால் கண்டறிய சிரமப்படும் அளவுக்கு தயார் செய்து விடுகின்றனர் சில விஷமிகள். இந்த டீப்ஃபேக் வீடியோக்களால் பல நடிகைகள், நடிகர்கள், மற்ற பிரபலங்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி, McAfee எனும் தொழில்நுட்பத்துறை அமைப்பு ஒரு ஆய்வறிக்கைகையை தயார் செய்து தற்போது அதனை வெளியிட்டுள்ளது. அதன்படி, 75 சதவீத இந்தியர்கள் டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதில் 38 சதவீத மக்கள் டீப்ஃபேக் வீடியோவை எதிர்கொண்டுள்ளனர் என்றும், அதில் 18 சதவீதம் பேர் அதனால் பாதிப்படைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. டீப்ஃபேக் வீடியோ பார்த்தவர்களில் 57 சதவீதம் பேர் தாங்கள் பார்த்தது உண்மை தான் என்றும் நம்புகின்றனர்.

டீப்ஃபேக் வீடியோவால் பாதிப்படைந்ததில் 31 சதவீதம் பேர் தங்கள் பணத்தை இழந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டீப்பேக் வீடியோவால் பாதிப்படைந்ததில் 40 சதவீதம் பேர் தங்களின் குரல் மாற்றம் செய்த வீடியோவை பார்த்துள்ளனர் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் 39 சதவீதம் பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர் என்றும் McAfee அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல டீப்ஃபேக் வீடியோ மோசடியில் ஈடுபடும் நபர்களில் 55 சதவீதம் பேர் சைபர்கிரைம் குற்றத்தில் ஈடுபட இதனை செய்கிறார்கள் என்றும், மோசடியில் ஈடுபடுவதில், 52 சதவீதம் பேர் போலியாக ஆபாச படங்களை தயார் செய்கின்றனர் என்றும், 49 சதவீதம் பேர் மோசடி செய்வதற்காக டீப்ஃபேக் வீடியோக்களை பயன்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபடும் நபர்களில் 44 சதவீதம் பேர் ஆள்மாறாட்டம் செய்வதற்காகவும், 37 சதவீதம் பேர் போலி செய்திகளை தயார் செய்யவும், 31 சதவீதம் பேர் தேர்தலில் வாக்களிக்கவும் இதனை பயன்படுத்தினர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 27 சதவீதம் பேர் வரலாற்றை திரித்து வீடியோ தயார் செய்யவும் (தற்போது சமூக வலைத்தளத்தில் பரவும் போலி IPL கிரிக்கெட் வீடியோக்கள் போல ) டீப்ஃபேக் (DeepFake) வீடியோ தயார் செய்கின்றனர் என்றும் McAfee அமைப்பு தங்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

14 minutes ago

தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…

36 minutes ago

PahalgamAttack : ஜம்மு காஷ்மீர் தாக்குதல்…மனதை உலுக்கும் காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…

1 hour ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

2 hours ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

2 hours ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

3 hours ago