ஜார்கண்ட் மாநிலத்தில் 20 பேருடன் சென்ற பிக்கப் வேன், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில், பிக்கப் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால், வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 3 தொழிலார்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டுமானப்பொருட்கள் நிரப்பப்பட்ட சாக்குகளுடன் சுமார் 20 பேர் அந்த வேனில் பயணித்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். காயமடைந்தவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு சிங்பூமில் உள்ள சாய்பாசாவிலிருந்து செரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள ராஜ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வேன் விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகிறது.
போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்தவர்களில் 8 பேர் நிலை மோசமானதில் ஜாம்ஷெட்பூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…