கர்நாடகா ரோட்ஷோவில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்க பாதுகாப்பை மீறிச்சென்ற நபர்! பரபரப்பு.!
கர்நாடகாவில் நடைபெற்ற ரோட்ஷோவில், பாதுகாப்பை மீறி ஒரு நபர், பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்க முயன்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில், 26வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் நடைபெற்ற சாலைக் கண்காட்சியின் போது, பிரதமர் மோடிக்கு மாலை அணிவிப்பதற்காக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதுகாப்புக் கவசத்தை மீறிச் சென்றார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி, தனது வாகனத்தில் இருந்து கூட்டத்தை நோக்கி கை அசைத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த நபர், சாலையின் நடுவிலுள்ள தடுப்புகளை தாண்டி குதித்து, பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்க முயன்றுள்ளார், இதனையடுத்து பாதுகாப்பு படையினர் விரைவாக அவரை அழைத்துச் சென்றனர்.
#WATCH | Karnataka: A young man breaches security cover of PM Modi to give him a garland, pulled away by security personnel, during his roadshow in Hubballi.
(Source: DD) pic.twitter.com/NRK22vn23S
— ANI (@ANI) January 12, 2023