இங்க பாருங்க ! 360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் தனியாக துபாய்க்கு பயணித்த பயணி..!

Published by
Sharmi

மும்பையிலிருந்து துபாய்க்கு 18,000 ரூ டிக்கெட் விலையில் 360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் தன்னந்தனியாக பயணித்த பயணி.

மே 19 அன்று மும்பையிலிருந்து துபாய்க்கு போயிங் 777 ரக விமானம் புறப்பட்டுள்ளது. இதில் 40 வயதை சேர்ந்த பாவேஷ் ஜாவேரி என்பர் பயணித்துள்ளார்.

இவரது விமான பயணத்தின் டிக்கெட் விலை 18,000. ஆனால், விமானத்தில் இவர் ஒருவர் தான் பயணித்துள்ளார். மும்பை மற்றும் துபாய் விமான நிலையங்களை இணைக்கும் இந்த விமான சேவையை அதிகமானோர் பயன்படுத்துவர்.

ஆனால், தற்போது கொரோனா பரவலால் விமான சேவை பாதிப்படைந்துள்ளது. இதனால் குறைவான பயணிகள் மட்டுமே தற்போது விமானத்தை பயன்படுத்துகின்றனர்.

அதிலும் பாவேஷ் ஜாவேரி சென்ற விமானத்தில் அவர் ஒருவர் தான் பயணி என்பது அவருக்கே விமானத்தில் உள் நுழையும் போது விமான பணிப்பெண்கள் கை தட்டி வரவேற்ற பொழுது தான் தெரிந்துள்ளது.

அந்தவகையில் பாவேஷ் விமான பணிப்பெண்ணிடம்,  நான் 20 ஆண்டுகளாக விமான பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 240 முறை விமானத்தில் பயணம் செய்துள்ளேன். ஆனால், இதுவே எனக்கு மிகவும் சிறந்த பயணமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். பணத்தால் அனுபவத்தை வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

360 இருக்கைகளில் இவர் 18 ஆவது இருக்கையை கேட்டு வாங்கி பயணித்துள்ளார். இந்த எண் இவருக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், விமான பணிப்பெண் இவரிடம், தனியாக பயணிக்க நீங்கள் பயப்படுவீர்களோ! என்று நினைத்ததாக கூறியுள்ளார்.

அதன் பின்னர், விமானி பாவேஷிடம் வந்து நான் உங்களுக்கு விமானத்தை சுற்றி காட்டவா என்று கேலி செய்து பேசியிருக்கிறார். அதன் பின்னர், பயணத்தின் போது அறிவிப்பை வெளியிட்டால் பயணிகளின் கவனத்திற்கு என்று கூறுவர்.  ஆனால், இந்த பயணத்தில் தொடர்ந்து விமானி மிஸ்டர் ஜாவேஷ் விமானம் தரையிறங்க போகிறது, சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் இவர் சென்ற பயணங்களிலே இதுவே சிறந்த அனுபவமாக இருந்ததாக பாவேஷ் ஜாவேரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விமானம் மும்பையிலிருந்து துபாய்க்கு செல்வதற்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள 17 டன் எரிபொருள் செலவாகியுள்ளது. இந்த விமானம் துபாயிலிருந்து மும்பை வரும் பயணிகளுக்காக இயக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது, அதனால் ஒரு பயணியும் வரவில்லை என்றால் கூட இந்த விமானம் துபாய் சென்றிருக்கும் என்று விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்! 

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

44 minutes ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

2 hours ago

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …

3 hours ago

விராட், ரோஹித் எல்லாம் ஓரம் போங்க! இன்ஸ்டாவில் சம்பவம் செய்த ஹர்திக் பாண்டியா!

துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…

4 hours ago

உங்களை கல்யாணம் பண்ண எப்படி மாறனும்? பதில் சொல்லி ரசிகரை அழவைத்த மாளவிகா!

சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…

4 hours ago

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

6 hours ago