உத்தரப் பிரதேசம் : நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏற்கனவே, ஐஸ்கிரீமில் மனித விரல் கண்டறியப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் வசிக்கும் தீபா என்ற பெண், நேற்று (ஜூன் 15) ஆன்லைன் டெலிவரி தளம் மூலம் தனது குழந்தைகளுக்கு ஒரு முக்கிய பிராண்டிலிருந்து ஐஸ்கிரீம் பெட்டியை ஆர்டர் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த ஐஸ்கிரீம் பெட்டியைத் திறந்ததும், உள்ளே ஐஸ்கிரீமுடன் உறைந்திருந்த பூரானை கண்டு அதிர்ச்சியடைந்தார். தற்போது, இந்த சம்பவத்தின் காட்சிகளை தீபா பகிர்ந்துள்ள நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில், இதே போன்ற மற்றோரு ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது. ஒரு நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்தது.
Yummo நிறுவன பட்டர்ஸ்காட்ச் கோனில் 2 சென்டிமீட்டர் நீளமுள்ள துண்டிக்கப்பட்ட மனித விரல் இருப்பதைக் கண்டு பெண் மருத்துவர் ஒருவர் போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில், அது தொடர்பாக, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்ட இடம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…