Centipedes - amul ice [file image]
உத்தரப் பிரதேசம் : நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏற்கனவே, ஐஸ்கிரீமில் மனித விரல் கண்டறியப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் வசிக்கும் தீபா என்ற பெண், நேற்று (ஜூன் 15) ஆன்லைன் டெலிவரி தளம் மூலம் தனது குழந்தைகளுக்கு ஒரு முக்கிய பிராண்டிலிருந்து ஐஸ்கிரீம் பெட்டியை ஆர்டர் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த ஐஸ்கிரீம் பெட்டியைத் திறந்ததும், உள்ளே ஐஸ்கிரீமுடன் உறைந்திருந்த பூரானை கண்டு அதிர்ச்சியடைந்தார். தற்போது, இந்த சம்பவத்தின் காட்சிகளை தீபா பகிர்ந்துள்ள நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில், இதே போன்ற மற்றோரு ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது. ஒரு நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்தது.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…