கருப்பு பூஞ்சை பாதித்தவர்களுக்கு ‘எலும்பு மரணம்’ என்ற புதிய நோய் – மருத்துவர்கள் அச்சம்….!

Published by
Edison

மும்பையில் கருப்பு பூஞ்சை பாதித்த 3 கொரோனா நோயாளிகளில் ‘எலும்பு மரணம்’ என்ற புதிய நோய்த் தொற்று பதிவாகியிருப்பதாக இந்துஜா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மும்பையில் கருப்பு பூஞ்சை நோய்தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வந்த 3 பேருக்கு சிகிச்சைக்கு பின்னர் “அவஸ்குலர் நெக்ரோசிஸ் (ஏ.வி.என்) என்ற இறந்த எலும்பு திசுக்கள் (எலும்பு மரணம்) ” என்ற புதிய நோய் தொற்றுகள்  உறுதி செய்யப்பட்டுள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி,மும்பையில் உள்ள மஹிம், இந்துஜா மருத்துவமனை, கோவிட் சிகிச்சை பெற்ற மூன்று 40 வயதுக்குட்பட்ட நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ‘இறந்த எலும்பு திசுக்கள்’ நோய் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இது குறித்து,மஹிம், இந்துஜா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சஞ்சய் அகர்வாலா கூறுகையில்:”இந்த நோயாளிகளுக்கு அவர்களின் தொடை எலும்பில் கடுமையான வலி ஏற்பட்டது, அவர்கள் மருத்துவர்களாக இருந்ததால், அவர்கள் அறிகுறிகளை அடையாளம் கண்டு விரைவில் சிகிச்சை எடுத்தக் கொண்டனர்.

ஏ.வி.என் மற்றும் மியூகோமைகோசிஸுக்கு இடையிலான பொதுவான காரணங்கள் ஸ்டெராய்டுகளின் பயன்பாடு ஆகும்.காரணம்,இது கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படும் ஒரே மருந்து ஆகும். டாக்டர் அகர்வாலாவின் ஆய்வுக் கட்டுரை படி கொரோனா தொற்றிலிருந்து உயிர் காக்கும் ஸ்டீராய்டுகளை பெரிய அளவில் பயன்படுத்துவதால், ஏவிஎன் நோய்த்தொற்று பாதிப்புகள் மீண்டும் எழும்” என்று அவர் கூறினார்.

இதனால்,கொரோனா பாதித்தவர்களுக்கு  ஏ.வி.என் அடுத்த புதிய நோய் பரவல் நிலையாக இருக்கலாம் என்றும்,அடுத்த சில மாதங்களில் ஏ.வி.என் நோய்த்தொற்றுகள் அதிகளவில்  ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள்.

இதற்கிடையில், கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில், மியூகோமிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 264 நோயாளிகளில் 30 பேர் ஒரே கண்ணில் பார்வை இழந்துவிட்டதாக மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

மேலும்,அனுமதிக்கப்பட்ட அனைவருமே கண் அறுவை சிகிச்சையுடன் எண்டோஸ்கோபிக்கு உட்படுத்தப்பட்டதாகவும்,ஆனால் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 நோயாளிகள் ஒரு கண்ணில் பார்வை இழந்துவிட்டனர்.எனினும்,ஆரம்ப கட்டத்தில் வந்தவர்களுக்கு இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்தியதாக அம்மருத்துவமனை டீன் டாக்டர் என் நிர்மலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அவர்கள்,மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் (யூ.டி.) மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு ஆம்போடெரிசின்-பி கூடுதல் 2,12,540 குப்பிகளை அரசு ஒதுக்கியுள்ளது என்று சமீபத்தில் தெரிவித்தார்.

கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க ஆம்போடெரிசின்-பி பயன்படுத்தப்படுகிறது. இதனால், இவை மூக்கு, கண்கள், சைனஸ்கள் மற்றும் சில நேரங்களில் மூளைக்கு கூட சேதம் விளைவிக்கும்.கடுமையான மற்றும் மோசமான நோய்வாய்ப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சையான ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் மியூகோமைகோசிஸ் மற்றும் இறந்த எலும்பு திசுக்கள் நோய் தூண்டப்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Published by
Edison

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago