வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட லிங்க்கை கிளிக் செய்த நபர் ஒருவர் ரூ.6.16 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் பெரும்பாலான பயனர்களால் மெட்டாவின் சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்கள் செய்திகளை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் சிலர் மக்களிடம் இருந்து பணத்தை பறிப்பதற்கான மோசடி வேலைகளை செய்ய இதனை பயன்படுத்துகின்றனர்.
அந்தவகையில், நாக்பூரைச் சேர்ந்த 29 வயதான நபர் தனது வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்கை கிளிக் செய்ததால் ரூ.6.16 லட்சத்தை இழந்துள்ளார். ஒரு பெண் அவரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு நிறுவனத்தைப் பற்றிய தகவல்ளை லிங்க் மூலம் அனுப்புவதாகவும், அதனை சரிபார்க்கும்படியும் கேட்டுள்ளார்.
அந்த இணைப்பை கிளிக் செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.16 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது என்று அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…