மகனுடன் சென்று ரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…!

Default Image

மகனுடன் சென்று ரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண். 

உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், ஒரு பெண் தனது 7 வயது மகனுடன் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ரிஹானா என்ற 35 வயதுடைய பெண் அவரது மகனுடன் டெல்லியில் இருந்து வந்து கொண்டிருந்த, ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ்ரயிலில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மேற்கு காவல் நிலைய பகுதியில் தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஜிஆர்பி காவல் நிலைய ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி விஜய் ராணா கூறுகையில், வெள்ளிக்கிழமை மாலை இரண்டு பேர் ரயிலில் விருந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கிடைத்தது. சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரிஹானாவின் கணவர் சிர்ஜா கூறுகையில், தனது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், வெள்ளிக்கிழமை ஈத் பண்டிகையையொட்டி அவர் தனது உறவினரின் வீட்டிற்கு சென்றதாகவும், அவர் திரும்பி வந்தபோது அவரது மனைவியும் மகனும் வீட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk