இன்னுயிரை நீத்த 20 வீரர்களுக்கு நினைவுசின்னம்-கல்வானின் “வீரதீரர்கள்” என்று பொறிப்பு!

Published by
kavitha

எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் எய்திய 20 இந்திய ராணுவ வீரர்கள் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் கடந்த மே மாதத்தில் அத்துமீறி அதிகாரத்தோடு நுழைந்து கூடாரங்களை அமைத்து மட்டுமின்றி தொடர்ந்து ஜூன் மாதத்தில் சீன – இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையிலான கைகலப்பில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து இரு நாட்டு எல்லைகளில் ராணுவமும், ஆயுதங்களும் குவிக்கப்பட்டு போர் தொடர்பான பதற்றமான நிலை ஏற்பட்டது. பின் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தைகள் பலகட்டமாக நடத்தப்பட்டது.

இதனிடையே தங்களது இன்னுயிரை தாய்மண்ணிற்காக தியாகம் செய்த 20 ராணுவ வீரர்களின் நினைவாக கல்வான் பகுதியில் நினைவுச் சின்னமானது அமைக்கப்பட்டு  தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வீரமரணம் எய்திய 20 வீரர்களின் நினைவாக கல்வான் பள்ளத்தாக்கில் லடாக்  சாலையில் இந்நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.  நினைவுச் சின்னத்தில், 2020ம் ஆண்டு ஜூன் 15ந்தேதி கமான்டிங் ஆபீசர் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான ராணுவப் பிரிவினர் இங்கு அமைக்கப்பட்டிருந்த சீனாவின் மக்கள் சுதந்திர ராணுவப் பிரிவு (பிஎல்ஏ) கூடாரங்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது அப்போது நடந்த கைகலப்பில் 20 இந்திய ராணுவ வீரர்கள் எதிரினடை திணரித்து உயிர் நீத்தனர். மேலும் இதற்கு முன் எதிரிகளின் கூடாரங்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக அகற்றியது. மேலும் சீனாவின் பிஎல்ஏ ராணுவப் பிரிவுக்கும் பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. என்று வீரமரணம் அடைந்த 20 வீரர்கள் கல்வானின் வீரதீரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 1975ம் ஆண்டுக்கு பிறகு இந்திய – சீன எல்லைப் பிரச்சினையில் நடந்த உயிர்ப்பலிக்குப் பிறகு நடந்த நிகழ்வு  இது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Published by
kavitha

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago