Dead [Representative Image]
தமிழகத்தை சேர்ந்த மதன்குமார் எனும் மருத்துவக்கல்லூரி மாணவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரியில் ( Rajendra Institute of Medical Sciences – RIMS) முதுகலை தடவியல் துறையில் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இன்று அதிகாலை RIMS மருத்துவ கல்லூரி விடுதி எண் 5 அருகே கீழே உள்ள முட்புதரில் பாதி எரிந்த நிலையில் மதன்குமார் உடலானது கிடந்துள்ளது. உடனடியாக ராஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற புகார்.! திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி விசாரணைக்கு ஆஜர்.!
மதன்குமார் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மதன்குமார் மருத்துவ கல்லூரி விடுதியில் அறை எண் 79இல் தங்கி இருந்துள்ளார். அவர் உடல் கிடந்த மாடியில் இன்ஜின் ஆயில் சிதறி கிடந்துள்ளது. ஒருவர் கால் தடம் இருந்துள்ளது என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் தடவியல் துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மதன்குமாரின் செல்போன், லேப்டாப் ஆகியவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு தான் மதன் குமார் உயிரிழப்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள முடியும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…