திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்த நபர்!

Default Image
  • உத்தியப்பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

உத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஃபெதாபூர் மாவட்டத்தில் வீட்டில் தனது மகளை உறவினர் மகன் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்ததாக பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இளம்பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.அவருக்கு 22 வயதாகிறது .இந்த விவகாரம் இரண்டு வீட்டிற்கும் தெரியவந்துள்ளது.உடனே பஞ்சாயத்து கூட்டியுள்ளனர்.

அந்த கிராம பஞ்சாயத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதுவரை இருவரும் விலகி இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.ஆனால் அதை அந்த நபர் ஏற்கவில்லை.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அந்த உறவினர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தீவைத்து எரித்துள்ளார்.பின்னர் அந்த பெண் உடல் பாதிக்கும் மேல் எறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay