நண்பரின் மனைவியையே கடத்தி சக நண்பர்களுடன் பலாத்காரம் செய்த நபர்!திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai
  • நண்பனின் மனைவியையே கடத்தி மற்ற நண்பர்களை அழைத்து பலாத்காரம் செய்து ஏ டி எம் கார்டை பறித்து சென்ற நபர்.
  • புகாரின் அடிப்படையில் மூவரையும் கைது செய்த காவல்துறையினர்.

ஒடிசாவில் உள்ள கலஹந்தி  மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயதுடைய பெண்மணி ஆவார்.இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.எனவே வீட்டில் தனது மாமியாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 11 -ம் தேதி புதன் கிழமை அன்று பவானிபட்னா அருகே உள்ள கிராமத்தில் தனது வீட்டில் மாமியாருடன் இருந்துள்ளார்.அப்போது கணவரின் நண்பர் என்று ஒருவர் சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

அப்போது இரவு நேரம் ஆகியதால் இன்று தங்கிவிட்டு நாளை காலை செல்லுங்கள் என்று அந்த பெண்ணின் மாமியார் கூறியுள்ளார்.அதனால் அந்த நபரும் நண்பரின் வீட்டிலேயே தங்கி நண்பரின் மனைவி கையால் சாப்பிட்டுள்ளார்.

பின்னர் மறுநாள் காலை வியாழன் கிழமை தனது இருசக்கர வாகனத்த்தில் அந்த நபர் அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது நண்பரின் மனைவி பக்கத்தில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க கிளம்பியுள்ளார்.

பின்னர் போகும் வழியில் நண்பரின் மனைவியை சந்தித்த அந்த நபர் வங்கியில் தான் இறக்கிவிடுவதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார்.அந்த பெண்ணும் தனது கணவரின் நண்பர் என்ற எண்ணத்தில் வாகனத்தில் எறியுள்ளார்.

பின்னர் அந்த நபர் சிறிது தூரம் சென்றவுடன் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தி ஒதுக்குபுறமான இடத்திற்கு அந்த பெண்ணை கடத்தி சென்றுள்ளார்.மேலும் கைபேசியில் அழைத்து தனது இரண்டு நண்பர்களை வரவழைத்துள்ளார்.

பின்னர் தனது நண்பரின் மனைவி என்று கூட பாராமல் ஈவு இரக்கம் இல்லாமல் அந்த பெண்ணை ஒருவர் மாற்றி ஒருவர் பலாத்காரம் செய்துள்ளனர்.பின்னர் அதே இடத்தில் அந்த பெண்ணை விட்டு சென்ற அவர்கள் அந்த பெண்ணிடம் இருந்த ஏ டீ எம் கார்டை பறித்து சென்றுள்ளன.

இதன் காரணமாக அந்த பெண் காவல்துறையினரிடையே புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த மூன்று நபரையும் கைது செய்துள்ளனர்.

பின்னர் அவர்களிடம் இருந்த ஒரு ஸ்கூட்டார் மற்றும் அந்த பெண்ணின் ஏ டி எம்மையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

இந்நிலையில் நண்பனுக்காக உயிரையே கொடுக்கும் நண்பர்கள் இருக்கும் இந்த நாட்டில் நண்பனுக்கு பெரும் துரோகத்தை அளித்த இந்த நபரின் செயல் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

30 minutes ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

1 hour ago

ஹெட் விக்கெட் எடுக்கிறது ஈசி இல்லை கண்ணா! இந்தியாவுக்கு சவால் விட்ட ஸ்டிவ் ஸ்மித்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…

1 hour ago

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

2 hours ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

3 hours ago

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

5 hours ago