rajasthan Man Arrested [file image]
ராஜஸ்தான் : பலர் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைய சில ஆபத்தான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபட்டு கடைசியாக காவல்துறையிடம் கைதாகியும் வருகிறார்கள். அப்படி தான் ராஜஸ்தானில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒருவர் தனது எஸ்யூவியின் காருக்கு டீசல் போடும்போது மோசமான செயல் ஒன்றில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வைரலாக பரவிய வீடியோவில் நபர் ஒருவர் தனது காருக்கு டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்கிற்கு வந்து டீசல் டேங்க் முழுவதுமாக நிரம்பியும் கூட பாதி டீசலை கிழவே ஒழுகவிட்டுக்கொண்டு இருந்தார். அதைப்போல மற்றோரு பெட்ரோல் பங்கிலும் அந்த நபர் டீசல் முழுவதுமாக இருந்தும் வேண்டும் என்றே ரீல்ஸ் எடுக்க டீசலை வெளியே விட்டுக்கொண்டு இருந்தார்.
பிறகு காரில் நடுரோட்டில் கெத்தாக செல்வதுபோலவும் ஒரு இடத்தில் நின்று கொண்டு கூல்ரிங்ஸ் குடித்துக்கொண்டும் இருந்தார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வரும் நிலையில், கடந்த ஜூலை 2 அன்று, அஜ்மீர் காவல்துறை அதைக் கவனத்தில் எடுத்து, விசாரணை செய்து மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் பேரிடரை ஏற்படுத்தியிருக்கலாம் என்று வீடியோவில் இருந்த பதே சிங் மற்றும் மகாவீர் குஜ்ஜார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவலை தெரிவித்தனர்.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டதால் தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…