உத்தரகாண்ட்: கடந்த ஜூன்-24ம் தேதி அன்று உத்தரகாண்டில் உள்ள, நியூ தெஹ்ரி மாவட்டத்தில் இருக்கும் பௌராடியில் ஒரு பெண்ணும், அவரது 2 மருமகளும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரில் அதிவேகமாக வந்த அரசு அதிகாரி ஒருவரின் கார் அவர்கள் மீது மோதியது. இதில் அந்த மூவரும் தூக்கி எறியப்பட்டனர்.
இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மேலும் அந்த 2 சிறுமிகளும் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த கார் மோதியதில் மேலும் இருவர் லேசான காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்களான நேகி (36 வயது), சிறுமிகளான அக்ரிமா (10 வயது) மற்றும் அன்விதா (7 வயது)ஆவார்கள். இந்த கோர விபத்து சம்பவம் நியூ தெஹ்ரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தை ஏற்படுத்திய அரசு அதிகாரி குடிபோதையில் இருந்ததால் தான் இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த காரை ஒட்டி வந்த தொகுதி மேம்பாட்டு அதிகாரியான தேவி பிரசாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் பார்ப்போர் மனதை உறைய வைக்கும் அளவிற்கு உள்ளது இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…