Goat [file image]
சென்னை : பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஏலத்தில் ஆடு ஒன்று 7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது.
பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி கொண்டாடபட இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில் ஆடு விற்பனை மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
அங்கு தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், ஒரு ஆடு ஏலத்தில் ரூ.7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வளவு விலைக்கு ஆட்டை யார் வாங்கியது? அப்படி என்ன இந்த ஆட்டில் இருக்கிறது நீங்கள் கேட்கலாம். இந்த ஆடு கிட்டத்தட்ட 161 கிலோ எடை கொண்டதாம்.
இந்த ஆடு குறித்து அதனுடைய உரிமையாளர் ஷஹாப் அலி பேசியதாவது ” இந்த ஆட்டிற்கு தற்போது 2 வயது ஆகிறது. இந்த ஆட்டை நான் ராஜஸ்தானில் இருந்து வாங்கி வந்தேன். ஒரு வருடமாக காட்டில் வசித்து வந்ததால், ஆட்டிற்கு சரியான பராமரிப்பு இருக்கவேண்டும் என்பதால், நான் கடந்த ஓராண்டாக ஆட்டை இங்கு கவனித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இவ்வளவு விலை கொடுத்து இந்த ஆட்டை யார் வாங்கினார் என்று அவருடைய விவரத்தை ஆட்டின் உரிமையாளர் ஷஹாப் அலி கூறவில்லை. இருப்பினும் இவ்வளவு விலைக்கு ஆட்டை விலைகொடுத்து வாங்கி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…