Categories: இந்தியா

கங்கானாவை அறைந்த பெண் காவலருக்கு பெங்களூருக்கு பணிமாற்றமா.? CISF புது விளக்கம்.!

Published by
கெளதம்

பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில் இணைக்கப்பட்டு, பெங்களூருவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகியது.

கடந்த ஜூன் 7ஆம் தேதி, சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையின் போது, ​​கங்கனா ரனாவத் மற்றும் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முத்தியதும், குல்விந்தர் கவுர் கங்கனா ரணாவத்தை அறைந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்த சம்பவம் தொடர்பாக கங்கனவும் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

தற்பொழுது, பணியிடமாற்றம் குறித்து செய்தி பொய்யானது என்று CISF தெளிவுபடுத்தியுள்ளது. குல்விந்தர் கவுர் மீண்டும் பணியில் சேர்க்கப்படவில்லை, அவர் இன்னும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவருக்கு எதிராக விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும் CISF-ஐ கூறியதை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.

குல்விந்தர் கவுர்  விளக்கம்

கங்கனா ரணாவத்தை அறைந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தின் போது, பஞ்சாபி பெண்களைப் பற்றி கங்கனா ரணாவத் இழிவான கருத்துக்களால் பேசியதால், தான் அறைந்ததாக விளக்கம் கொடுத்திருந்தார்.

யார் இந்த குல்விந்தர் கவுர்

கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் சுல்தான்பூர் லோதி நகரைச் சேர்ந்தவர். பஞ்சாப் மற்றும் சண்டிகர் விமான நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். மேலும் அவர் சக CISF அதிகாரியை திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

இந்திய மகளிர் அணி படுதோல்வி..! 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த நியூஸிலாந்து!

துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும்…

10 hours ago

“முதலமைச்சர் கோப்பை., 11.53 லட்சம் வீரர்கள்., ரூ.35 கோடி பரிசு.,”  உதயநிதி பெருமிதம்.!

சென்னை : மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த…

14 hours ago

சவாலாக அமைந்த தென்னாபிரிக்க வீராங்கனைகள்! 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 3-வது போட்டியானது இன்று துபையில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

14 hours ago

இன்ஸ்டாவை மிஞ்சிய வாட்ஸ்அப்..! இந்த அம்சம் இங்கும் வரப்போகுது!

சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது.…

14 hours ago

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையை வழிபடும் முறை.. !

சென்னை - சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம் …

15 hours ago

தனித்தனியாக நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்.! பிரதமர் மோடி முதல் மு.க.ஸ்டாலின் வரை…

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

15 hours ago