dog searches for owner [file image]
கர்நாடகா : உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா தாலுக்காவில் உள்ள ஷிரூர் என்ற கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 66 இல் ஒரு மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதன் காரணமாக நான்கு வழிச்சாலையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் கனமழை பெய்ததால், தேசிய நெடுஞ்சாலை 776-E மற்றும் தேசிய நெடுஞ்சாலை 66 உட்பட பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதே போல், ஹொன்னாவர் மற்றும் பெங்களூருவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 69 இல் நிலச்சரிவு காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது, இருப்பினும் சாலை சுத்தம் செய்யப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஒரு தகவல்களின்படி, NH66 தேசிய நெடுஞ்சாலை அருகே இருக்கும் கங்காவலி ஆற்றின் கரையில் உள்ள ஒரு தேநீர் கடையில் நின்று கொண்டிருந்த 5 பேர் நிலச்சரிவில் சிக்கிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தை மாவட்ட நிர்வாகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், நிலச்சரிவு ஏற்பட்ட மண் குவில்கள் மீது, நாய் தனது உரிமையாளரை தேடும் காட்சிகள் மனதை உருக வைக்கிறது. இதோ அந்த காட்சி…
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…