கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய கூடாது என காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை , வாபஸ் எல்லாம் நிறைவு பெற்று 2,613 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் கடந்த முறை ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் கர்நாடக தேர்தலில் பாஜக பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கர்நாடக தேர்தலில் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுப்பட கூடாது எனவும் அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ள்ளது. அண்ணாமலை காவல்துறையில் ஐபிஎஸ் பணியில் கர்நாடகாவில் தான் இருந்துள்ளார் என்பதால் அவருக்கு இங்குள்ள காவல்துறையினரின் பெரும்பாலானோரை தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் அதனை அண்ணாமலை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என காங்கிரஸ் தரப்பில் இருந்து அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…