Categories: இந்தியா

ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு .! தலைமை செயலர், டிஜிபிக்கு பறந்த உத்தரவு.!

Published by
மணிகண்டன்

Jharkhand – ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி, இரு சக்கர வாகனத்தில் ஆசிய நாடுகளை சுற்றி வந்தனர். அவர்கள், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளை அடுத்து கடந்த வாரம் இந்தியா வந்தனர். கடந்த மார்ச் 1ஆம் தேதி இரவு ஜார்கண்ட் மாநில தும்கா எனுமிடத்தில் அருகில் விடுதி இல்லாத காரணத்தால் சாலையோர அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கினர்.

Read More – என் கணவரை தாக்கி…7 பேர்..,ஸ்பானிஷ் பெண்ணின் பதைபதைக்க வைத்த வாக்குமூலம்.!

அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் தம்பதியினரை தாக்கி, ஸ்பெயின் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். ஸ்பெயின் நாட்டு பெண்ணிற்கு இந்தியாவில் நேர்ந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சிக்குளாக்கியது. பெண்ணின் வாக்குமூலம், மேற்கண்ட விசாரணை ஆகியவற்றை கொண்டு 3 பேரை ஜார்கண்ட் மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.

Read More – பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு இழப்பீடு சட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாயை ஜார்கண்ட் மாநில அரசு வழங்கியுள்ளது.

Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்… தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

இந்நிலையில் தான் , நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. முக்கிய அதிகாரியாக ரிது குமார் எனும் வழக்கறிஞரை நீதிமன்றம் நியமித்துள்ளது. வரும் மார்ச் 7ஆம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பான முழு விசாரணை விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில தலைமை செயலாளர், மாநில டிஜிபி, தும்கா எஸ்பி, உள்துறை செயலகம் ஆகியவற்றிக்கு ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

7 mins ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

4 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

5 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

5 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

5 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

5 hours ago