பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து..! 4 பேர் உயிரிழப்பு..!

Default Image

மும்பை நெடுஞ்சாலையில் பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா : பால்கர் மாவட்டத்தின் மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். கார் குஜராத்தில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள டிவைடரில் மோதியது.

car-bus collision 2
[Image Source : Twitter/@ANI]

இந்த மோதலுக்கு பிறகு தனக்கு எதிரே வந்த சொகுசு பேருந்தில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சொகுசு பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்தனர்.

car-bus collision 1
[Image Source : Twitter/@ANI]

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்