Categories: இந்தியா

பீகாரில் 15 நாளில் 10வது பாலம் இடிந்து விழுந்தது.!

Published by
மணிகண்டன்

பீகார்: சரண் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே பயன்பாட்டில் இருந்த ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

பீகார் மாநிலத்தில் சமீப நாட்களாக பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. இதுவரை கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்ததாக வெளியாகும் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டாலும், மாநிலத்தில் உள்ள கட்டடங்களின் தரம் மீதான கேள்விகள் வலுவாக எழுப்பப்படுகிறது.

ஏற்கனவே, நேற்று சரண் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழைமையான ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில்,  தற்போது அதே மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

கண்டகி ஆற்றின் குறுக்கே, சரய்யா மற்றும் சதுவா எனும் கிராமங்களை இணைக்கும்படியாக கட்டப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்ததால் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் குறிப்பிட்ட கிராமங்களை போக்குவரத்து ரீதியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

மாவட்ட மூத்த அரசு அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பாலம் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. பாலம் இடிந்து விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. தற்போது முதற்கட்டமாக இடிந்து விழுந்த பாலத்தின் பகுதிகளை ஆற்றில் இருந்து தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

சமீபத்திய தொடர்சியாக பாலம் இடிந்து விழும் விபத்துகள் தொடர்பாக மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலம் முழுவதும் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலங்களின் தரம் மற்றும் தற்போதைய கட்டுமான நிலைப்பாடு, அதே போல, பழைய பாலங்களின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமித்துள்ளார்.

கடந்த ஜூன் 18 முதல் பீகார் மாநிலத்தின் கிஷன்கஞ்ச் , அராரியா , கிழக்கு சம்பாரண், மதுபானி , சிவன் மற்றும் சரண் ஆகிய பகுதிகளில் இதுவரை 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…

31 minutes ago
“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

4 hours ago
நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

4 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

5 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

6 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

6 hours ago