தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டம் போதன் நகரை சேர்ந்த 25 வயதான கணேஷ் என்பருக்கு வரவேற்பு மற்றும் திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற வரவேற்பில் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மிகவும் சத்தமாக இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் புதுமாப்பிள்ளையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சிறுது நேரத்திற்கு பிறகு மாப்பிளை சற்று சோர்வாக காணப்பட்டார் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கணேஷிற்கு திருமணம் நடந்துள்ளது.
திருமணம் நடந்த பிறகு சில மணி நேரங்கள் கழித்து புதுமாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் விரைந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவருடைய குடும்பத்தினர் கூறுகையில், மகிழ்ச்சிக்காகவும், உற்சாகத்திற்காவும் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி, மாப்பிளை கணேஷின் வாழ்க்கையை முடித்து வைத்து விட்டதாக உறவினர்கள் கண்ணீர்விட்டு சோகத்தை தெரிவித்துள்ளனர்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…