தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டம் போதன் நகரை சேர்ந்த 25 வயதான கணேஷ் என்பருக்கு வரவேற்பு மற்றும் திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற வரவேற்பில் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மிகவும் சத்தமாக இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் புதுமாப்பிள்ளையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சிறுது நேரத்திற்கு பிறகு மாப்பிளை சற்று சோர்வாக காணப்பட்டார் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கணேஷிற்கு திருமணம் நடந்துள்ளது.
திருமணம் நடந்த பிறகு சில மணி நேரங்கள் கழித்து புதுமாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் விரைந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவருடைய குடும்பத்தினர் கூறுகையில், மகிழ்ச்சிக்காகவும், உற்சாகத்திற்காவும் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி, மாப்பிளை கணேஷின் வாழ்க்கையை முடித்து வைத்து விட்டதாக உறவினர்கள் கண்ணீர்விட்டு சோகத்தை தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…