Puducherry: புதுச்சேரியில் கடந்த 2ஆம் தேதி மாயமான 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோலை நகரைச் சேர்ந்த அந்த சிறுமி மார்ச் 2-ஆம் தேதி மாயமானதாக அவரது பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில், 3 நாட்கள் கழித்து அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன அந்த சிறுமியைக் கண்டுபிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, முத்தியால்பேட்டையில் வசிக்கும் மக்கள் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பேசுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் முறையான விளக்கம் அளித்தனர். இதனையடுத்து, அப்புகுதியை சேர்ந்த சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர், குழந்தையைக் கண்டுபிடிக்க சிறப்புக் குழுவை அமைக்குமாறு வலியுறுத்திருந்தார்.
இந்நிலையில், தங்களது குழந்தையை காணும் என சிறுமியின் பெற்றோர் கடந்த சனிக்கிழமை மாலை புகார் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, தீவிர தேடுதலில் ஈடுபட்ட போலீசார், இன்று சோலை நகர் வாய்க்காலில் இருந்து சிறுமியை சடலமாக மீட்டனர். தற்போது, அந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குழந்தை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சந்தேகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக சோலை நகர் மக்கள் சோகத்தில் உள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…