ஹரியானா மாநிலம் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கி முனையில் 30 வயது பெண் மற்றும் அவரது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபரை குறுகிராமம் போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றச்சாட்டப்பட்டவர் ஹரிஷ் என்று அடையலாம் காணப்பட்டார். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் கணவரின் நண்பர், இந்த சம்பவத்தையும் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தற்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆயுத சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் போண்ட்ஸி என்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் தனது 14 வயது மகள் மற்றும் 9 வயது மகனுடன் அங்குள்ள காரி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் அதே கிராமத்தில் வசிப்பவர் என்றும், கணவரின் நண்பராக இருப்பதால் கணவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களது வீட்டிற்கு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றசாட்டியுள்ளார். அவரது புகாரில், என் கணவர் நலமாக இல்லை. எனவே, எனது சகோதரர் அவரை ஜிந்திற்கு என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார். மார்ச் 19 அன்று ஹரிஷ் என் வீட்டிற்கு வந்தார். அப்போது, எனக்கு உடல்நிலை சரியில்லாததால், அவர் ஒரு மயக்க மருந்து கொடுத்தார். மருந்து உட்கொண்ட பிறகு நான் மயக்கமடைந்தேன்.
பின்னர் ஹரிஷ் என்னை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த முழு சம்பவத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியிட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் தனது வீட்டிற்குச் சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது போலவே தனது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கணவர் ஜூன் 28 அன்று இறந்ததை அடுத்து அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் விசாரணையில், பாதிக்கப்பட்ட இருவரின் மருத்துவ பரிசோதனையும் பாலியல் பலாத்காரத்தை உறுதிப்படுத்தியது. இதனிடையே, குற்றவாளி ஏற்கனவே, ஒரு ஆயுதச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், கற்பழிப்பு வழக்கில் அவரது காவலை விரைவில் நீதிமன்றத்தில் இருந்து எடுப்போம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. செக்டர் -10 ஏ காவல் நிலையத்தில் குற்றம் சட்டப்பட்டவர்க்கு எதிராக போக்ஸோ சட்டம் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…