துப்பாக்கி முனையில் 30 வயது பெண் அவரது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் கைது.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஹரியானா மாநிலம் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கி முனையில் 30 வயது பெண் மற்றும் அவரது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபரை குறுகிராமம் போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றச்சாட்டப்பட்டவர் ஹரிஷ் என்று அடையலாம் காணப்பட்டார். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் கணவரின் நண்பர், இந்த சம்பவத்தையும் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தற்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆயுத சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் போண்ட்ஸி என்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் தனது 14 வயது மகள் மற்றும் 9 வயது மகனுடன் அங்குள்ள காரி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் அதே கிராமத்தில் வசிப்பவர் என்றும், கணவரின் நண்பராக இருப்பதால் கணவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களது வீட்டிற்கு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றசாட்டியுள்ளார். அவரது புகாரில், என் கணவர் நலமாக இல்லை. எனவே, எனது சகோதரர் அவரை ஜிந்திற்கு என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார். மார்ச் 19 அன்று ஹரிஷ் என் வீட்டிற்கு வந்தார். அப்போது, எனக்கு உடல்நிலை சரியில்லாததால், அவர் ஒரு மயக்க மருந்து கொடுத்தார். மருந்து உட்கொண்ட பிறகு நான் மயக்கமடைந்தேன்.

பின்னர் ஹரிஷ் என்னை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த முழு சம்பவத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியிட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் தனது வீட்டிற்குச் சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது போலவே தனது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கணவர் ஜூன் 28 அன்று இறந்ததை அடுத்து அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் விசாரணையில், பாதிக்கப்பட்ட இருவரின் மருத்துவ பரிசோதனையும் பாலியல் பலாத்காரத்தை உறுதிப்படுத்தியது.  இதனிடையே, குற்றவாளி ஏற்கனவே, ஒரு ஆயுதச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், கற்பழிப்பு வழக்கில் அவரது காவலை விரைவில் நீதிமன்றத்தில் இருந்து எடுப்போம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. செக்டர் -10 ஏ காவல் நிலையத்தில் குற்றம் சட்டப்பட்டவர்க்கு எதிராக போக்ஸோ சட்டம் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

11 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

13 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

14 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

15 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

17 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

18 hours ago