கேரளாவில் நாணயத்தை விழுங்கிய 3வயது குழந்தை , பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்ததால் சிகிச்சை மறுப்பு.!

Published by
Ragi

கேரளாவில் நாணயத்தை விழுங்கிய 3 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று அதிகமுள்ள கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து வந்ததால் சிகிச்சை அளிக்க மறுத்ததாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கேரளாவில் ஆலுவா பகுதியை சேர்ந்த நந்தினி மற்றும் ராஜூ தம்பதியரின் 3 வயது மகனான பிருத்விராஜ் நாணயத்தை தெரியாமல் விழுங்கியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் சிறுவனை ஆலுவா தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, மருத்துவர் இல்லை என்று கூறி எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் அதே போன்று மருத்துவர் இல்லை என்று கூற ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியுள்ளனர். அதனையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் இருக்கும் நாணயம் வாழைப்பழத்தையும், தண்ணீரையும் கொடுத்தால் இறங்கும் என்றும், அடுத்து குழந்தை மலம் கழிக்கும் போது நாணயம் வெளியே சென்று விடும் என்றும் கூறி குழந்தையை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.

இந்த நிலையில் குழந்தையின் தாயார், குழந்தை நாணயம் விழுங்கியதை மருத்துவர்கள் தீவிரமாக எடுக்கவில்லை என்றும், கொரோனா அதிகமுள்ள கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து சென்றதால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மறுத்ததாகவும் கூறி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த ஆலுவா தாலுகா மருத்துவமனை அதிகாரி, குழந்தைக்கு சிகிச்சை செய்யும் குழந்தை அறுவை சிகிச்சை மருத்துவர் இல்லாத காரணத்தால் எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும், சாதரணமாக எக்ஸ்ரே எடுக்கும் போது கன்டோன்மென்ட் பகுதியில் இருந்தா வருகிறீர்கள் என்று கேட்டதாகவும் கூறியுள்ளார். அதனையடுத்து எர்ணாகுளம் பொது மருத்துவமனை அதிகாரி கூறியதாவது, குழந்தையின் சிறுகுடலில் சிக்கியிருந்த நாணயத்தை அகற்றுவதற்கான கேஸ்ட்ரோ சர்ஜன் இல்லாததால் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்ததாக தெரிவித்தார்.

 

Recent Posts

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு! 

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு!

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

8 hours ago

RCB vs GT : இதுவா பெங்களூரு மைதானம்? கதறும் RCB வீரர்கள்.. அடுத்தடுத்த அவுட்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…

8 hours ago

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

9 hours ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

10 hours ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

11 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

11 hours ago