200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவனை 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்டெடுத்தனர் .
மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டத்தின் பிரத்விபூர் பகுதியில் உள்ள சேதுபுராபரா கிராமத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் . இவரது 3 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது அங்கு மூடாமல் இருந்த 200 அடியுள்ள ஆழ்துளை கிணற்றில் கடந்த 4-ஆம் தேதி தவறி விழுந்துள்ளார் . அதனையடுத்து குழந்தையின் அழுகை குரலை கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு படைக்கும் ,காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர் .
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவ வீரர்கள் மற்றும் மாநில மீட்பு குழுவினர் குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் . இரவு பகல் என்று பாராமல் ராணுவ வீரர்கள் குழந்தையை மீட்க போராடி வந்தனர் . 3 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3 மணியளவில் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றிலிருத்து சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர் .கிணற்றில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…