22 வயதான வங்கதேச பெண் ஒருவர் இந்தியாவை சேர்ந்த தனது காதலனை திருமணம் செய்வதற்காக எல்லையை காடு மற்றும் ஆற்றை கடந்து வந்து திருமணம் செய்துள்ளார்.
கிருஷ்ணா மண்டல் என்ற வங்காளதேச பெண், அபிக் மண்டலுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்பு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.கிருஷ்ணாவிடம் பாஸ்போர்ட் இல்லாததால், சட்டவிரோதமாக எல்லையை கடக்க முடிவு செய்துள்ளார்.
கிருஷ்ணா முதன்முதலில் ராயல் பெங்கால் புலிகளுக்கு பெயர் பெற்ற சுந்தரவனப் பகுதிக்குள் நுழைந்துள்ளார்.பின்னர் அங்கிருந்து ஆற்றில் சுமார் ஒரு மணி நேரம் நீந்தி தனது காதலனை சந்தித்துள்ளார் இந்த துணிச்சல்மிக்க பெண்.
மூன்று நாட்களுக்கு முன்பு, கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில், கிருஷ்ணா அபிக்கை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததற்காக அவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணா பங்களாதேஷ் உயர்அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டின் தொடக்கத்தில்,இந்தியாவில் சாக்லேட் வாங்குவதற்காக வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் எல்லையை ஆற்றில் நீந்தி கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…