கேரளாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 110 வயதான மூதாட்டி பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 110 வயதான ரந்தாதினி வரியாத் பத்து என்ற மூதாட்டி கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். மகள் மூலமாக கொரோனா பாதிக்கப்பட்ட இந்த மூதாட்டி தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு நேற்றைய தினம் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் கே. கே சைலஜா கூறுகையில், கொரோனாவுக்கான லேசான அறிகுறிகளுடன் தான் பத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது வயதினை கணக்கில் கொண்டு மூதாட்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அதற்கு மூதாட்டி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கூறினார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 110 வயதான மூதாட்டி மீண்டது பெருமை என்று தெரிவித்துள்ளார். மேலும் மூதாட்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் 14 நாட்கள் வீட்டில் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 105 வயதான மூதாட்டி மற்றும் 103 வயதான முதியவர் மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…