ரூ.9000 கோடி மோசடி!நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கேட்ட விஜய் மல்லையா!கோரிக்கையை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்

Published by
Venu

லண்டனில் இருந்து நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கேட்ட விஜய் மல்லையாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகள் பலவற்றில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை டிசம்பர் 10 ஆம் தேதி  நீதிமன்றம் வழங்கியது.

Image result for விஜய் மல்லையா

இதன் பின்னர்  லண்டனில் இருந்து இந்தியாவுக்கு  விஜய் மல்லையாவை அனுப்ப பிரிட்டன் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

பின் வங்கி கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பி ஓடிய குற்றவாளி என டெல்லி பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. பொருளாதார குற்றவாளி என்பதால், மல்லையாவின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம் என்று  சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.அதேபோல் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

இந்நிலையில்  உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் விஜய் மல்லையா.ஆனால் லண்டனில் இருந்து நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கேட்ட விஜய் மல்லையாவின் கோரிக்கை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

15 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

1 hour ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

3 hours ago