மீட்க சென்ற படகு கவிழ்ந்து 7 பெண்கள் உட்பட 9 பேர் பலி :16 பேர் காணவில்லை!

Published by
murugan

கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிரா ,கர்நாடக , குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் மழை பெய்து வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.கேரளா மாநிலத்திலும்  கன மழை பெய்து வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

பல பள்ளி , கல்லுரிகளுக்கு விடுமுறையும் கொடுக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ள பிரமானல் கிராமத்தில் இன்று மீட்பு பணி நடந்தது.வெள்ளத்தில் மீட்பதற்காக பஞ்சாயத்து படகு ஓன்று உள்ளது.

இப்படகில் இரண்டு முறை அக்கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வந்தனர்.ஆனால் 20 பேர் செல்லக்கூடிய அப்படகில் மூன்றாவது முறையாக 30 பேர் சென்றனர்.இதனால் திடீர்ரென படகு கவிழ்ந்தது.

இதில் 7 பெண்கள் உட்பட 9 பேர் இறந்தனர்.மேலும் 16 பேர் காணவில்லை மற்றவர்கள் பத்திரமாக நீந்தி வந்து உள்ளனர்.இதை தொடர்ந்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு  வந்த மீட்பு குழுவினர்  20 படகு மூலம் மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

Published by
murugan
Tags: BoAtindia

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

5 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

5 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

6 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

8 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

8 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

9 hours ago