இன்று செப்டம்பர் 11 அதாவது 9/11! உலக வரலாற்றில் மனிதகுலத்தை தாக்கியதாக அறியப்பட்ட ஒரு தேதி,மனிதகுலத்திற்கான மதிப்புகள் மூலமே இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க முடியும் -பிரதமர் மோடி
கொடூரமான 9/11 இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது.இந்த தாக்குதல் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது மனிதநேயத்தின் மீதான தாக்குதல் என்றும்,மனிதகுலத்திற்கான மதிப்புகளை புகுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற துயரங்களை தவிர்க்க முடியும் என்றார்.
“இந்த நாளில்,ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, செப்டம்பர் 11, 1893 அன்று, சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற உலக மத பாராளுமன்றத்தின் உலகளாவிய மேடையில் இந்தியாவின் நற்குணங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்,என்று பிரதமர் மோடி கூறினார்.
மனிதகுலத்தின் இந்த மதிப்புகள் மூலம் மட்டுமே 9/11 போன்ற சோகங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நாளில் மொத்தமாக 2,977 பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். செப்டம்பர் 11, 2001 அன்று, அமெரிக்கா அதன் வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டது.
பயங்கரவாத தாக்குதல்களில் 3,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வெறும் 102 நிமிட இடைவெளியில், நியூயார்க்கின் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் அல்கொய்தா இயக்கத்தால் கடத்தப்பட்ட விமானங்களால் தகர்க்கப்பட்டது.
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…