9 ஆயிரம் கோடி கடன்களை பெற்று கொண்டு ஊரை விட்டு ஓடிய விஜய்மல்லையாவின் சொத்துகள் முடக்கம்..!

Default Image

வங்கி கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கி லண்டன் தப்பி ஓடிய விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தொடங்கி இருக்கிறது. எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக கடன் பெற்ற விஜய் மல்லையா, திருப்பி செலுத்தாமல் லண்டன் சென்று விட்டார். அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜய் மல்லையாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், யுனைட்டட் பிரிவெரிஸ் நிறுவனத்தில் அவருக்கு சொந்தமாக இருக்கும் பங்குகள் ஆகியவற்றை விற்பதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது. இதற்கான அனுமதிக்காக விரைவில் நீதிமன்றத்தில் முறையிடப்பட இருக்கிறது.இதன் மூலம் சுமார் 10ஆயிரம் கோடி ரூபாய் திரும்பப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்