கர்நாடகாவில் 8- வது கொரோனா நோயாளி சென்ற இடங்கள் வெளியானது.!

Default Image

கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் 10 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் பெங்களூரை சார்ந்தவர்கள் , கலாபுராகி இரண்டு பேர் சார்ந்தவர்கள் மேலும் கலபுராகி சார்ந்த ஒருவர் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 10 பேரில் 8 நபர் கொரோனாவால் பாதிப்பதற்கு முன் எங்கு சென்றார்என்ற விபரம் வெளியாகி உள்ளது. அவர் மார்ச் 6 ஆம் தேதி, நோயாளி அமெரிக்கன் ஏர்வேஸால் சான் அன்டோனியோவிலிருந்து டல்லாஸுக்கு பயணம் செய்தார். மார்ச் 7 ஆம் தேதி, டல்லாஸிலிருந்து அமெரிக்கன் ஏர்வேஸ் வழியாக லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் சென்றார்.

ஹீத்ரோவிலிருந்து, மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பெங்களூருவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கியது.மார்ச் 9 ஆம் தேதி, அவர் ஒரு டென்னிஸ் கோர்ட்டுக்குச் சென்று ஒரு நபருடன் விளையாடினார். பின்னர் மீண்டும் மார்ச் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும் அதே டென்னிஸ் கோர்ட்டுக்கு விளையாடி உள்ளார்.

மார்ச் 10 தேதி  இரவு 10 மணிக்கு அவர் தனது காரில் சென்று தனது இரண்டு நண்பர்களை சந்தித்தார். பின்னர் அவர் தனது மனைவியுடன் மடிவாலாவில் சந்தியா தியேட்டரில் ஒரு படம் பார்த்துள்ளார்.

மார்ச் 11 தேதி அவர் லேசான காய்ச்சல் ஏற்பட பின்னர்  கண்காணிப்புக் குழுவால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார். மார்ச் 12 , 13 ஆகிய இரண்டு நாட்களில் ஆர்.ஜி.ஐ.சி.டி.க்கு வருமாறு அவரை கண்காணிப்புக் குழு கூறியுள்ளனர்.ஆனால் அவர் அதை கேட்காமல் தொடர்ந்து வீட்டிலேயே இருந்தார்.

மார்ச் 14 தேதி அவர் தனது காரில்  மதியம் 2.30 மணிக்கு தனது மனைவியுடன் ஆர்ஜிஐசிடிக்குச் சென்றார். மார்ச் 15 ஆம் தேதி  சிகிச்சைக்காக இரவு 9.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
Erode East By Election - VC Chandrakumar - Seethalakshmi
Delhi election result 2025 - Rahul gandhi - Devender Yadav
Gold Rate
MS Dhoni HOUSE
Erode By Election Result
Delhi Election 2025