காங்கிரஸின் மூத்த தலைவரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் ஆகிய சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் புனேவில் காலமானார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஓராண்டு காலம் முதலமைச்சராக இருந்தவர் தான் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர். இவர் அண்மையில் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின்பு அவர் குணமடைந்து தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்ததாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவால் 89 வயதான சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் காலமாகியுள்ளார்.
இவரது மறைவுக்கு மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமாகிய சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் அவர்களின் மறைவு குறித்து தெரிந்து கொண்டேன். அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மகாராஷ்டிராவின் அரசியலில் உறுதியான தன்மை கொண்டவர் என இவரைப் புகழ்ந்து தனது அஞ்சலியையும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…