8 வயது மகன் சரியாக படிக்காததால் குடிபோதையில் சூடு வைத்த தந்தை கைது!

Published by
Rebekal

தனது 8 வயது மகன் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்திற்காக குடிபோதையில் சூடு வைத்த கேரளாவை சேர்ந்த ஒரு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா எனும் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் என்பவருக்கு எட்டு வயதில் மகன் ஒருவன் இருக்கிறான். தினமும் குடித்துவிட்டு வந்து அக்கறையில் அடிப்பது போல மகனை படிக்கவில்லை என தொடர்ச்சியாக அடித்து வந்த சிவகுமார், தற்போது கரண்டியை சுடவைத்து சிறுவனுக்கு கை மற்றும் கால் பகுதிகளில் சூடு வைத்துள்ளார். தந்தையின் கொடூர செயல் தாங்க முடியாமல் சிறுவன் அலறி அடிக்கவே, அருகிலிரந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர்.

அதன் பின் அங்கிருந்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனை அவரது தந்தையிடம் இருந்து மீட்டதுடன், அச்சிறுவனை பத்தனம்திட்டா குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும் குடிபோதையில் மகனுக்கு சூடு வைத்த தந்தையை போலீசார் கைது செய்து காவல்துறையினரின் கண்காணிப்பில் வைத்துள்ளனர். படிக்கவில்லை எனும் காரணத்தை காட்டி சிறுவனை தனது போதைக்கு ஊறுகாயாக்கிய தந்தையின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

8 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

8 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

10 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

10 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

10 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

11 hours ago