தலைநகர் டெல்லியில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 12 வயது சிறுவன் மற்றும் 11 வயது சிறுவன் இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்றைய சூழலில் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தினந்தோறும் எங்கோ ஒரு மூளையில், ஏதோ ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் டெல்லியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 8 வயது சிறுமி ஒருவர் திங்கட்கிழமை மாலை தனது நண்பர்களுடன் விளையாடுவதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தன்னுடன் விளையாட வருமாறு சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளான்.
அதன் பின் வீட்டிற்கு வந்த சிறுமி தனது பெற்றோரிடம், தனக்கு மிகவும் வயிறு வலிப்பதாக கூறி அழுதுள்ளார். குழந்தையை பரிசோதித்து பார்த்ததில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததை கண்டறிந்துள்ளன. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகள் சோதனை செய்த போலீசார் 12 வயது சிறுவன் மற்றும் 11 வயது சிறுவன் இருவரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமி உயிருக்கு போராடி வரும் நிலையில், சிறுவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…