Categories: இந்தியா

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை..! 7 பேர் தாயகம் திரும்பினர்!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது. கத்தார் நாட்டில் உள்ள  தனியார் நிறுவனம் ஒன்றில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அப்போது,  இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் கத்தாரின் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளையும் அந்த நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இது இந்திய அரசுக்கும், முன்னாள் வீரர்களின் குடும்பத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேருக்கும் அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

அதாவது, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறப்படும் புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மத்திய அரசு இந்தியர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில், இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த கத்தார் நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்து 8 பேரை விடுதலை செய்தது. அதன்படி, விடுதலை செய்யப்பட்ட 8 பேரில் 7 பேர் இன்று காலை டெல்லி திரும்பினர். ஒருவர் இன்னும் இந்தியா திரும்பவில்லை. அவரும் விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 8 இந்தியர்களும் தஹ்ரா குளோபல் என்ற நிறுவனத்துக்காக கத்தாரில் தங்கி பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago