மகாராஷ்டிராவில் தான் பாதிப்பு, உயிரிழப்பும் அதிகம். அதன்படி நேற்று ஒரே நாளில் அமைச்சர் உட்பட 778 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசால் இதுவரை 23,077 பேர் பாதிக்கப்பட்டு, 718 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பின்னர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 4,749 பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் பாதிப்பு, உயிரிழப்பும் அதிகம். அதன்படி நேற்று ஒரே நாளில் அமைச்சர் உட்பட 778 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நேற்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மஹாராஷ்டிராவில் மொத்தம் இதுவரை 6427 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை 840 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளது. இதனிடையே தேசியவாத கட்சியை சேர்ந்த வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என தகவல் வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மும்பையில் தமிழர்கள் வசிக்கக்கூடிய தாராவியில் நேற்று மட்டும் 25 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் மும்பையில் இதுவரை 214 பேர் பாதிக்கப்பட்டு, 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…