இன்று தனது 74வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது ‘சுதந்திர’ இந்தியா.!

Published by
மணிகண்டன்

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா, ஆங்கிலேய அரசின் அதிகாரத்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. உலகின் மிகப்பெரிய சுதந்திர ஜனநாயக நாடாக உருவெடுத்து இன்றுடன் 73ஆண்டுகள் நிறைவடைந்து 74வது சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது சுதந்திர இந்தியா.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 74 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாள் இன்று. இந்த சுதந்திரத்திற்காக பல லட்சக்கணக்கானோர் தங்கள் உயிரை துட்சமென மதித்து நமக்காக நமது சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்பது இன்று நாம் நினைவுகூரத்தக்கது.

1757 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி என்ற வணிக நிறுவனத்தை கட்டமைத்தது. அதன் பின்னர், அவர்களின் சூழ்ச்சி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்து மக்களை அடிமை படுத்தி சுமார் 400 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர்.

1857ஆம் ஆண்டு முதல் சுதந்திர போராக அறியப்பட்ட சிப்பாய் புரட்சி உருவானது. அதனை ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். அதன் பின்னர், புரட்சி படைகள் மூலமும், அகிம்சை போராட்டங்கள் மூலமும் லட்சக்கணக்கானோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினர்.

அதில் மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டம் கோடிக்கணக்கான இந்தியார்களை ஒன்று சேர்த்தது. இதனால், ஆங்கிலேயர்களின் ஆட்சி ஆட்டம் கண்டது. 1947இல் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.

இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றிற்காக அன்று பல லட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை துறந்திருக்கிறார்கள். அந்த தியாகிகளை நினைவுகூர்ந்து அந்த சுதந்திரத்தை பேணி பாதுகாப்பது நம் இந்தியர் ஒவ்வொருவரின் கடமை.

Published by
மணிகண்டன்

Recent Posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

24 minutes ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

1 hour ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

1 hour ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

3 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

4 hours ago

மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…

4 hours ago