#அதிர்ச்சி: இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 747 மருத்துவர்கள் உயிரிழப்பு.. தமிழகத்தில் அதிகமாம்!

Published by
Surya

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு தங்களின் உயிரை பனையவைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். அந்தவகையில், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி தொகுப்பில், இந்திய மருத்துவ சங்கத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸால் 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.எம்.ஏ பொதுச்செயலாளர் டாக்டர் ஜெயேஷ் லெலே தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 89 மருத்துவர்களும், மேற்கு வங்கத்தில் 80 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலே கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 74 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஆந்திராவில் 70 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 66 மருத்துவர்களும், கர்நாடகாவில் 68 மருத்துவர்களும், கொரோனா அதிகரித்து வரும் குஜராத்தில் 62 மருத்துவர்கழும், பிகார் மாநிலத்தில் 40 மருத்துவர்களும், டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் 22 மருத்துவர்களும், அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் 20 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago