குஜராத் கிராமத்தில் சிறுத்தை 7 சிறுமியை தனது வீட்டிற்கு வெளியே இழுத்துச் சென்று கடித்து கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் சங்கசார் கிராமம் அருகே 7 வயது சிறுமி சிறுத்தையால் கொல்லப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரே மாதத்தில் இப்பகுதியில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
இந்நிலையில் சிறுத்தை சிறுமியை தன்பூர் தாலுகாவில் உள்ள தனது வீட்டின் வெளியே திங்கள்கிழமை மாலை இழுத்துச் சென்றதாக வாசியா துங்ரி வனத்துறை அதிகாரி மகேஷ் பர்மர் தெரிவித்தார். சிறுமியின் பாதி சாப்பிட்ட உடல் இன்று காலை காட்டுக்குள் காணப்பட்டது என்றார்.
இதற்கிடையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி, அதே தாலுகாவில் காந்து கிராமத்தில் சிறுத்தை ஒரு குழந்தையை கொன்றது . ஜூலை 26 ம் தேதி கஜூரி கிராமத்திற்கு அருகே ஒரு மேய்ப்பன் என்பவர் சிறுத்தையால் கொல்லப்பட்டார் என்றார்.
இந்த பகுதியில் சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்கிய பல சம்பவங்கள் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் பதிவாகியுள்ளது. இந்த சிறுத்தைகளை சிக்க வைக்க வீடுகளுக்கு அருகிலுள்ள இடங்களில் பல கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
அதே பகுதியில் கடந்த திங்கள் அன்று இரவு ஒரு சிறுத்தை சிக்கியது. ஆனால் ஏழு வயது சிறுமியைத் தாக்கிய சிறுத்தை தானா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…