கான்பூரில் 7வயது சிறுவன் ஸ்பைடர்மேன் போன்று சுவர்களில் ஏறுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் சைபடர்மேன் போன்று சுவர்களில் ஏறும் 7 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 7வயதான யஷார்த் சிங் என்னும் 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் யாருடைய உதவியும் இல்லாமல் எளிதாக சுவர்களில் ஏற்கிறார். இது குறித்து அந்த சிறுவன் கூறியதாவது, தான் ஸ்பைடர்மேன் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து வீட்டில் உள்ள சுவர்களில் ஏறி முயற்சி செய்ததாகவும் கூறினார். ஆரம்பத்தில் சுவர்களில் ஏறும் போது கீழே விழுந்தேன். ஆனால் அதனை தொடர்ந்து நான் இந்த முயற்சியில் வெற்றியை பெற்றேன் என்று தெரிவித்தார்.
மேலும் சிறுவனின் வீட்டிலுள்ள பெற்றோர்கள் ஆரம்பத்தில் அவன் கீழே விழுந்து விடுவானோ என்ற பயத்தில் சுவர்களில் ஏறுவதை ஊக்கப்படுத்தவில்லையாம். அதனையடுத்து சிறுவன் தினமும் முயற்சியை கைவிடாமல் செய்வதை கண்டு அவனை ஊக்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஏறும் போது நழுவினால் குதித்து விட்டு மீண்டும் முயற்சிப்பேன் என்று சிறுவன் கூறியுள்ளார். இந்த ஏழு வயது சிறுவனின் ஸ்பைடர்மேன் ஆகும் முயற்சிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…