Organ Transplant Tacket [File Image]
டெல்லி: உடல் உறுப்பு விற்பனையில் ஈடுபட்டதாக மருத்துவர் உட்பட 7 பேர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகளை, அவர்களின் உறவினர்கள் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தேவைப்படும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிப்பது சமீப காலமாக மருத்துவ உலகில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. உடல் உறுப்புகளை விற்பனை நோக்கத்தில் தானம் செய்வது சட்டப்படி பெரும் குற்றமாகும். இதனை தலைநகர் டெல்லியில் ஒரு கும்பல் தொடர்ந்து செய்து வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை பல லட்சங்கள் பரிவர்த்தனை செய்து வியாபார நோக்கத்தில் மேற்கொண்டது டெல்லி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், வியாபார நோக்கத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக இதுவரை ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாற்று அறுவை சிகிச்சைக்கும் 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை இந்த கும்பல் வசூல் செய்துள்ளது. இந்த மாற்று அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு இடையில் நடைபெற்றுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பல் 2019 முதல் இந்த குற்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளது என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…