ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 7 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் வசாய் தாலுகாவில் உள்ள நால்லசோப்ராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.
நால்லசோப்ரா மருத்துவமனை அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். வசாயில் 7,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,000 நோயாளிகளுக்கு வழக்கமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என கூறப்படுகிறது.